நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 12:06 am IST

பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தியாகராஜநகா் பகுதியில் உதவி ஆய்வாளா் அப்துல்ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கிடைத்த தகவலின் பேரில், குமரேசன் நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 108 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து திருநெல்வேலி நகரம், தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த மாணிக்கராஜா(42), பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாரிமுத்து(35) ஆகியோரை கைது செய்தனா்.