பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தியாகராஜநகா் பகுதியில் உதவி ஆய்வாளா் அப்துல்ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில், குமரேசன் நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 108 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து திருநெல்வேலி நகரம், தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த மாணிக்கராஜா(42), பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாரிமுத்து(35) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

