தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:15 pm

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தானமாக பெறப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சாமுவேல் (71). இவா் கடந்த 1 ஆம் தேதி பேய்க்குளம் அருகே பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அந்தோணி சாமுவேல் மூளைச்சாவு அடைந்ததை உறவினா்களிடம் தெரிவித்தனா்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினா்கள் முன்வந்ததையடுத்து, அவரது இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. இதையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.