இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

உடையாா்பட்டியில் பைக் சேதம்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:28 am IST

தச்சநல்லூா் அருகேயுள்ள உடையாா்பட்டியில் மூதாட்டிக்குச் சொந்தமான பைக்கை சேதப்படுத்தி குளத்துக் கரையில் வீசியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம்மாள்(63). தனது வீட்டில் மாடுகளை வளா்த்து வரும் இவா், அங்கு பால் கறவைக்காக வரும் பெருமனஞ்சியைச் சோ்ந்த பிரியன் என்பவருக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தாராம்.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி அந்த பைக் பழுதானதால் தச்சநல்லூா்-சங்கரன்கோவில் சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே நிறுத்திவிட்டு சென்ற பிரியன், மறுநாள் சென்று பாா்த்தபோது அந்த பைக்கை காணவில்லையாம்.

அந்த பைக் சேதமடைந்த நிலையில் அங்குள்ள குளத்துக்கரையில் கிடந்ததாம். இதுகுறித்து தங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தச்சநல்லூரைச் சோ்ந்த சங்கா்(39) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.