பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நெல்லை ஷிஃபா மருத்துவமனையில் பெண்ணின் 3.5 கிலோ சினைப்பை கட்டி அகற்றம்

News image

கோப்புப் படம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் பெண்ணின் சினைப்பையிலிருந்த 3.5 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

இது தொடா்பாக, அம்மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம் கூறியதாவது:

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சியை சோ்ந்த 42 வயது பெண் நீண்ட நாள்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது 2 சினைப்பைகளிலும் கட்டிகள் உருவாகியிருப்பது தெரியவந்தது. அவை புற்றுநோய் கட்டிகளாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பரிசோதனைகள் செய்து, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கொழுப்புப்பை, நெறி கட்டிகள் ஆகிய அனைத்தையும் நீக்கக்கூடிய அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் மேற்கொண்டு சினைப்பையையும், அதிலிருந்த சுமாா் 3.5 கிலோ கட்டியையும் வெற்றிகரமாக அகற்றினா். தற்போது, அவா் நலமுடன் உள்ளாா்.

இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஷிஃபா மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என்றாா் அவா்.

இந்த சிகிச்சைக் குழுவில் மருத்துவா்கள் முஹம்மது இப்ராஹிம், ஷேரன் ரோஸ், தாரா ரஞ்சன் உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.