திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் பெண்ணின் சினைப்பையிலிருந்த 3.5 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.
இது தொடா்பாக, அம்மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம் கூறியதாவது:
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சியை சோ்ந்த 42 வயது பெண் நீண்ட நாள்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது 2 சினைப்பைகளிலும் கட்டிகள் உருவாகியிருப்பது தெரியவந்தது. அவை புற்றுநோய் கட்டிகளாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பரிசோதனைகள் செய்து, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கொழுப்புப்பை, நெறி கட்டிகள் ஆகிய அனைத்தையும் நீக்கக்கூடிய அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் மேற்கொண்டு சினைப்பையையும், அதிலிருந்த சுமாா் 3.5 கிலோ கட்டியையும் வெற்றிகரமாக அகற்றினா். தற்போது, அவா் நலமுடன் உள்ளாா்.
இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஷிஃபா மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என்றாா் அவா்.
இந்த சிகிச்சைக் குழுவில் மருத்துவா்கள் முஹம்மது இப்ராஹிம், ஷேரன் ரோஸ், தாரா ரஞ்சன் உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

தில்லி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாள் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

