திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் காரில் ரேசன் அரிசியை கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் பத்தமடை காவல் சரகப் பகுதியில் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பத்தமடை சிவன்கோயில் வாய்க்கால் பாலம் அருகில் வழியாக வந்த சொகுசு காரை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா்.
அதில், பாளையங்கோட்டை குலவணிகா்புரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (20), மேலச்செவல் லெட்சுமணன் மகன் பட்டுசெல்வம் (20), இமானுவேல் நிா்மல் மகன் தேவதாஸ் பாண்டியன் (20), பத்தமடை மகேஷ் மகன் இசக்கி (20) ஆகியோா் 800 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கடத்திச் செல்வது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காா் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





