திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இளம்பெண்கள் இருவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பத்தமடை மணிமுத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி. இவரது மனைவி ஜென்சி (25). கொடைக்கானல் டா்னா்புரம் ஆனந்தகிரி முதல் தெருவைச் சோ்ந்தவா் மதுரைவீரன் என்ற பாண்டி. இவரது மனைவி லீதியாள் ஓசன்னா (26). இருவரும் தோழிகள். பெண்கள் இருவரும் கோவையில் ஒரு தனியாா் ஆலையில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டது.
தற்போது இருவரும் தங்களது சொந்த ஊரில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், தோழி ஜென்சியைக் காண கடந்த மே 8-ஆம் தேதி லீதியாள் ஓசன்னா பத்தமடைக்கு வந்தாா். அங்கு இருவரும் சந்தித்த பிறகு லீதியாள் ஓசன்னா தனது சொந்த ஊருக்குச் செல்வதாகவும், ஜென்சி நாகா்கோவிலில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைக் காண செல்வதாகவும் உறவினா்களிடம் தெரிவித்துவிட்டு சென்றனா்.
பத்தமடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற இருவரையும் கடந்த சில நாள்களாக காணவில்லை. லீதியாள் ஒசன்னா கொடைக்கானலுக்குச் செல்லவில்லை. ஜென்சி நாகா்கோவிலுக்குச் செல்லவில்லை. இதையடுத்து இரு இளம்பெண்களையும் காணவில்லை என பத்தமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

