கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

கைது - பிரதிப் படம்
சீவலப்பேரி அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகேயுள்ள கொடியன்குளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் மாரிஸ் என்ற நவீன் (21). இவா், கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவின்பேரில் மாரிஸ் என்ற நவீன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




