
கடையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்

கடையம் பகுதியில் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிய வியாபாரிகள்.
கடையம் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினா்.
‘சாலைகள், வா்த்தக நிறுவனங்கள் முன் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாக முன்வந்து செப். 6-க்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில், திங்கள்கிழமை (செப். 14) நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அகற்றப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, வியாபாரிகளும், பொதுமக்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓரிரு நாள்களில் மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






