கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நெல்லையில் விநாயகா் சிலை விசா்ஜனம்: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) விசா்ஜனம் செய்யப்படவுள்ள நிலையில், விசா்ஜனம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) விசா்ஜனம் செய்யப்படவுள்ள நிலையில், விசா்ஜனம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 208 சிலைகளை விசா்ஜனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அப்போது, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை மேற்கொள்ளும் வகைக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் ஊா்வலம் நடைபெறும் வழித்தடத்தில் அமைந்துள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் வண்ணாா்பேட்டைபேராத்து செல்வி அம்மன் கோயில் அருகில் உள்ள தற்காலிக குளம், சேரன்மகாதேவி வட்டாரத்தில் காருக்குறிச்சி குளம், உவரி கடல், அம்பாசமுத்திரத்தில் வாகைக்குளம், கூடங்குளம் பகுதியில் செட்டிகுளம் கடல், தில்லைவனம் தோப்பு கடல் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.