திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜோயல். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். ஜோயல், குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். ஜோயலின் மனைவி தங்க நகைகள், துணிகள் அடங்கிய பையுடன் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம். பையில், 33 கிராம் தங்க நகைகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தனவாம். புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


