தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உண்ணாவிரதம்

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2024, 11:55 am IST

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 இப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி. சசிகுமார், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லார்மின் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் என். ரெஜிஸ்குமார், மாவட்ட பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் டி.ஆர். மேரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம். பிந்து, நிர்வாகிகள் எம். ரகுபதி, கே. சுனில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

 போராட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். லீமாரோஸ் பேசியதாவது: தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடுவதற்கும், மதுவுக்கு அடிமையான மக்களை மீட்டெடுக்கவும், மாணவர், இளைஞர்களிடம் போதைப் பழக்கத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்தெடுப்பதற்கும் தொடர் இயக்கங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கங்கள் சார்பில் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

இப் போராட்டத்தில் முன்சிறை வட்டார இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச்  செயலர் கே.சி. விக்டர், துணைச் செயலர் சந்தோஷ், வட்டாரக் குழு உறுப்பினர் அனீஷ், நடைக்காவு ஊராட்சித் தலைவி மேரி ஸ்டெல்லாபாய் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.