சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்னணு குடும்ப அட்டை குளறுபடி: 6,000 புகார் மனு அளித்த எம்.எல்.ஏ.

கிள்ளியூர் தொகுதியில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக பெறப்பட்ட 6000 புகார் மனுக்களை வட்ட வழங்கல் அலுவலரிடம்  எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:20 am IST

கிள்ளியூர் தொகுதியில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக பெறப்பட்ட 6000 புகார் மனுக்களை வட்ட வழங்கல் அலுவலரிடம்  எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட அடைக்காகுழி, மெதுகும்மல், குளப்புறம், உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகள் உள்ளிட்ட 10 ஊராட்சிப் பகுதிகளிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், மின்னணு குடும்ப அட்டைகளில் உயர் குறியீடான என்பிஎச்எச் என்ற குறியீடுகளுடன் ஏராளமானோர் மின்னனு குடும்ப அட்டை பெற்றுள்ளதாகவும், இவற்றுக்கு பிஎச்எச் என்ற குறியீட்டுடன் மின்னணு அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் கோரி 6000 பேர் புகார் மனுக்களை அளித்திருந்தனர்.
இந்த மனுக்களை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.  இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இது குறித்து ஏற்கெனவே துறை உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியது: என்.பி.எச்.எச். என்ற அட்டை முன்னுரிமை அற்றவர்களுக்கானதாக உள்ளது. இம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இதே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ரேஷன் உணவுப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்படும். ஆகவே, உரிய விசாரணை நடத்தி தகுதியான பயனாளிகளுக்கு பிஎச்எச் என்ற குறியீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தெரிவித்தார். 
இந் நிகழ்ச்சியில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெஞ்சமின்,  நிர்வாகிகள் மேரிபாய், பால்ராஜ், லூயிஸ், லலிதா, டென்னிஸ், பால்ராஜ், நேசமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.