தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

என்.ஐ. பல்கலையில் ஏப்.11, 12இல் மாநில பளுதூக்கும் போட்டி

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில்,  பல்கலைக்கழகங்களுக்கு இடையே  மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி ஏப்.11,  12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:53 am

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில்,  பல்கலைக்கழகங்களுக்கு இடையே  மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி ஏப்.11,  12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், என்.ஐ. பல்கலைக்கழகமும் இணைந்து மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியை நடத்துகின்றன. 
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்திலுள்ள இருபால் பளுதூக்கும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் இருபாலருக்கும் தனித் தனியாக உடல் எடை அடிப்படையில் 8 பிரிவுகளில் நடைபெறுகிறது.
ஏப். 11ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிக்கு, இணை துணை வேந்தர் சந்திரசேகர்,  மாவட்ட விளையாட்டு அலுவலர்  தீர்த்தோஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி வைக்கிறார். மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ.ஜனார்த்தனன் வரவேற்கிறார். தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத் தலைவர் பொன்.ராபர்ட்சிங் போட்டியைத் தொடங்கிவைக்கிறார். 
சிறப்பு விருந்தினராக ஒலிம்பிக் வீரர் சிவராஜ் பங்கேற்கிறார். உடற்கல்வி இயக்குநர் தர்மராஜ் நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.