இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அழகியமண்டபத்தில் திமுக கூட்டணி கூட்டம்

அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:58 am IST

அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு,  மேற்கு  மாவட்ட திமுக  செயலர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாதவன், விடுதலைச் சிறுத்தைகள்  மாத்தூர் ஜெயன்,  இந்தியன் முஸ்லிம் லீக் திருவை செய்யது,  மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், வர்க்கீஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
அப்போது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தக்கலையில்  ஏப். 23ஆம் தேதி மாலை  4 மணிக்கு நடைபெறும் மனிதச் சங்கலி போராட்டத்தை சிறப்பாக நடத்துவது; போராட்டத்தில் அனைத்து வர்த்தக சங்கங்கள்,  தொழிலாளர்கள்,  தோழமை  கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள்  அனைவரையும்  கலந்துகொள்ளச்செய்து போராட்டத்தை  வெற்றிபெற வைப்பது' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.