நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

நல்லூர் பேரூராட்சியில் பாஜக ஆர்ப்பாட்டம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி

Updated On :18 ஏப்ரல் 2018, 6:58 am IST

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நல்லூர் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பிரதாப்சிங், ராஜேந்திரன், அரிச்சந்திரன், சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கிள்ளியூர் ஒன்றிய பாஜக தலைவர் தாணுமூர்த்தி, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், கிள்ளியூர் ஒன்றியப் பார்வையாளர் சுடர்சிங், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ரவீந்திரன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.