தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலய பெருவிழா ஏப். 27இல் தொடக்கம்

கேரள மாநிலம், எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலயப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 27 ) தொடங்குகிறது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:02 am IST

கேரள மாநிலம், எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலயப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 27 ) தொடங்குகிறது.
இது குறித்து, சீரோ மலபார் கூரிய ஆயர் மார் செபாஸ்டின் வாணியப் புரக்கல், பேரருள்தந்தை ஜான் மணக்குந்நேல் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு  புதன்கிழமை அளித்த பேட்டி:
கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் இயேசுவின் மீதும், திருச்சபையின் மீதும் கொண்ட விசுவாசத்துக்காக தன் உயிரைக் காணிக்கையாக்கி மறைசாட்சியாக மரித்தவர் தூய ஜார்ஜியார். இவர் உலகம் முழுவதும் மக்களால் நேசிக்கப்படுகிறார். அவருடைய விசுவாச வாழ்வு கிறிஸ்தவ மக்களுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தகைய புகழ் பெற்ற தூய ஜார்ஜியாருக்கு எடத்துவாவில் பேராலயம் அமையப் பெற்றுள்ளது. இந்தப் பேராலயப் பெருவிழா ஏப். 27  ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  மே மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  
முதல்நாள் காலை 6 மணிக்கு நவநாள், திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடைபெறுகிறது. பேரருள்தந்தை ஜான் மணக்குந்நேல் கொடியேற்றுகிறார். காலை 7.30 மணிக்கு  சீரோ மலபார் கூரிய ஆயர் மார் செபாஸ்டின் வாணியப்புரக்கல் திருப்பலி நிறைவேற்றுகிறார். 10 மணிக்கு அருள்தந்தை இக்னேஷியஸ் தமிழ் திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலையில் நவநாள், திருப்புகழ்மாலை, திருப்பலி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.  
 மே 5 ஆம் தேதி நடைபெறும்  ஆடம்பரத் திருப்பலியில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்துகொள்கிறார்.  மே 7ஆம் தேதி திருப்பலியை கோட்டாறு மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற  ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் நிறைவேற்றுகிறார்.  மே 14  ஆம் தேதி எட்டாமிடம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது.   விழா ஏற்பாடுகளை அருள்தந்தையர் வர்கீஸ் புத்தன்புர, வில்சன் புன்னக்காலவாயில், மைக்கிள் நெல்வன்குழியில், ஆன்றனி தேவாரி உள்ளிட்டோர் செய்துவருகின்றனர் என்றனர்.
பேட்டியின்போது, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர்  தாமஸ் பௌவத்துப் பறம்பில், தக்கலை மறைமாவட்ட தகவல்தொடர்புத் துறை ஜூனு ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.