குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா

குற்றாலத்தில் செண்பகாதேவி அருவிக்கரையோரம் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்திரை பௌர்ண
Updated on
1 min read

குற்றாலத்தில் செண்பகாதேவி அருவிக்கரையோரம் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் தீர்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரை பெளர்ணமி விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு, உச்சிக்கால பூஜை, மாலையில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு வழிபாடு, இரவில் வில்லிசை, நள்ளிரவில் சித்திரை பௌர்ணமி சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை காலையில் செண்பகாதேவி அருவியில் மஞ்சள் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com