பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

குமரியில் சாய்பாபா சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு அஞ்சல் உறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:13 am IST

கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு அஞ்சல் உறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சாய்பாபா மகா சமாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு, முதன்மை அஞ்சல் அதிகாரி எம். சம்பத் தலைமை வகித்து, சாய்பாபா சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். முதல் உறையை குமரி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம்.கோமதிநாயகம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத், அஞ்சல் துறையின் தென்மண்டல இயக்குநர் பவன்குமார், கன்னியாகுமரி கோட்ட முதன்மை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர், சத்குரு டி.கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பொற்றையடி ஸ்ரீ சேவா டிரஸ்ட் தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.