ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

திங்கள்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  சிபிஐ (எம்எல்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:44 am

DIN

திங்கள்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  சிபிஐ (எம்எல்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு  ஆர்.சுசீலா தலைமை வகித்தார். நிர்வாகிகள் மேரி ஸ்டெல்லா,  சூசைமரியான், கணபதி, செல்வராஜ், வி.ஐயப்பன்,  அமல், டி.ஐயப்பன்,  அர்ஜூனன், செல்வமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்டச் செயலர் எஸ்.எம். அந்தோணிமுத்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப்  பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் கார்மல், தங்கவடிவு,  சுதன், வேலம்மாள், ஜெயக்குமார்,  சாந்தி , ஜாக்குலின், செல்வன், லதா  உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.
ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம்  பொய்யான வாக்குறுதி,  பெட்ரோல், டீசல்   விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்தவில்லை,  இலவச கல்வி, மருத்துவம்,  அனைவருக்கும் பென்சன்,  குறைந்த பட்ச கூலி ரூ .21ஆயிரம்  மற்றும் மீனவர்கள்,  விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை  போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.