சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:13 am

DIN

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இரணியல் அருகே உள்ள சுண்டன்விளை ரயில்வே கிராஸிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக கோட்டாறு ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
உதவி ஆய்வாளர் ராஜபூபதி மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் வில்லுக்குறி தினவிளையைச் சேர்ந்த மனோசபின் (26) என்பதும், இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வாகனங்கள் பழுது நீக்குபவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.