மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 2:13 am

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இரணியல் அருகே உள்ள சுண்டன்விளை ரயில்வே கிராஸிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக கோட்டாறு ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
உதவி ஆய்வாளர் ராஜபூபதி மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் வில்லுக்குறி தினவிளையைச் சேர்ந்த மனோசபின் (26) என்பதும், இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வாகனங்கள் பழுது நீக்குபவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.