6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் அதிமுக: குமரியில் தொண்டர்கள் உற்சாகம்

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் நிகழ்வு க

News image
Updated On :9 ஜூலை 2018, 2:15 am

DIN

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஏ.விஜயகுமார் எம்.பி. தலைமை வகித்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றியத்துக்குள்பட்ட பேரூர் மற்றும் ஊராட்சி செயலர்களின் வீடுகளுக்குச் சென்றனர். கட்சிக் கொடிகளால் தோரணம் கட்டுவது, வரவேற்பு விளம்பர பதாதைகள் வைப்பது என கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலர் ஏ.விஜயகுமார் எம்.பி. கூறியது: தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்திலும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும் வீடுதோறும் சென்று அவர்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பை இனிவரும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.