தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குலசேகரத்தில் இன்று ரப்பர் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ரப்பர் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்   குலசேகரத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:15 am

DIN

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ரப்பர் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்   குலசேகரத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ரப்பர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து ரப்பர் தோட்டங்களை விடுவிக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சட்டத்தின் பிடியிலுள்ள விளை நிலங்களை  விவசாயிகள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் தமிழக அரசு  தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் "4 ஏ' என்னும் சட்டத் திருத்தம் ஏற்படுத்தி அரசிதழில் வெளியிட்டது. இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் கூட்டம் குலசேகரம் எப்ஏசி அரங்கில் திங்கள்கிழமை  (ஜூலை 9) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் பங்கேற்று,  விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.