குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளிவந்த இளைஞர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மணவாளக்குறிச்சி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (29) . கடந்த மே 24ஆம் தேதி சிவராஜ் உள்பட 6 பேர் சேர்ந்து, படர்நிலம் பகுதியைச் சேர்ந்த ரெக்சிலினை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட சிவராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இரணியல் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் சிவராஜ் புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த மணவாளக்குறிச்சி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

நடுகடலில் தீப்பிடித்த படகு! பாதுகாப்பாக தப்பித்த மீனவர்கள்! | Thoothukudi

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


