அமைதி ரதயாத்திரை சாமிதோப்பு வருகை
அகில பாரத பத்மநாபதாஸ் பக்த ஜனசேவா சமிதி சார்பில் கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய அமைதி ரத யாத்திரை சாமிதோப்பு வந்தது.


அகில பாரத பத்மநாபதாஸ் பக்த ஜனசேவா சமிதி சார்பில் கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய அமைதி ரத யாத்திரை சாமிதோப்பு வந்தது.
உலக அமைதி வேண்டி சாதுக்களால் தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சாமிதோப்பை வந்தடைந்தது. அங்குள்ள அன்புவனத்துக்கு வந்த யாத்திரைக் குழுவினரை, பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்றார். இந்த ரதயாத்திரையில் கேரளத்தைச் சேர்ந்த பிரமானந்தா தீர்த்த புஷ்பாஞ்சலி சுவாமி, சொருபானந்த மடம் சிவனந்தகிரி சுவாமிகள், மோகன்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து சாமிதோப்பில் சாதுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருக்கோயில்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லக்கூடாது. சாமிதோப்பு தலைமைப்பதியை தேவசம்போர்டு நிர்வாகம் கைப்பற்றக் கூடாது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சாமிதோப்பில் சாதுக்கள் சங்கமம் என்ற மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராசிரியர் ஆர். தர்மரஜினி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...