வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சடையமங்கலம் ஊராட்சியில் நாளை 2 ஆம் கட்ட மனு நீதிநாள் முகாம்

சடையமங்கலம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2 ஆம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (மே 16) நடைபெறுகிறது.

Updated On :14 மே 2018, 7:23 pm

சடையமங்கலம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2 ஆம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்குளம் வட்டம், சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அப்பட்டுவிளை புனித ஜோசப் சமூக நலக் கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி திட்ட (இரண்டாம் கட்டம்) நிறைவு நாள் முகாம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஏப். 19 ஆம்தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது, பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் முகாமில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, சடையமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.