சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை (அக். 24) கடையடைப்பு, போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் காந்தி மண்டபம் முன் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தென்குமரி வியாபாரிகள் சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பார்க் வியூ பஜார் சங்கம், தமிழ் அன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரைச் சாலை வியாபாரிகள் சங்கம், விவேகானந்தா சிறு முதலீட்டு வியாபாரிகள் சங்கம், பகவதியம்மன் வளாக வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்க உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

