திருவட்டாறு அருகே பிரார்த்தனை கூட்டம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருவட்டாறு அருகே உம்மன்கோடு பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஜெப வீடு உள்ளது. இதில் ரெஜிமோன் (42) போதகராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த குளோரி தனது மகனின் திருமணநாளையொட்டி வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த முடிவு செய்து, கிறிஸ்தவ ஜெப வீட்டிற்கு செல்பவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து குளோரியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அப்போது மற்றொரு தரப்பினர் பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றதாம். இதில், குளோரி உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டதாம். இதுகுறித்து, ரெஜிமோன் அளித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸார் வர்க்கீஸ், ரெஜின், சபி, சுதாகரன் ரெதீஸ், சஜின் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதில் 4 பேரை கைது செய்தனர்.
மேலும், வர்க்கீஸ் அளித்த புகாரின்பேரில் ரெஜிமோன், பிபின்சாமுவேல், சாமுவேல், செல்வகுமார், ஜான்ரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், இதில் ஒருவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கோவை மாவட்டத்தில் மாதிரி, பசுமை வாக்குச்சாவடிகள்

அடிப்படை வசதிகளில் மேம்பாட்டை எதிா்நோக்கும் கோவை வாக்காளா்கள்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

