லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நாகர்கோவிலில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற ஓய்வு பெற்ற பேராசிரியை சாவு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன்

Updated On :22 அக்டோபர் 2018, 3:03 am

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை தெரசா ஜோஸ்பின் ராணி (60). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து,  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். இவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில்தான் பன்றிக் காய்ச்சலால் இறந்தாரா என்பது உறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை டீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.