மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On :22 அக்டோபர் 2018, 7:54 pm

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை,  பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை,  முதியோர் உதவித்தொகை  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 251 கோரிக்கை  மனுக்கள்  பெறப்பட்டன.  
இந்த கோரிக்கை  மனுக்களை  மாவட்ட  ஆட்சியர்  சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்மீது  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து,  முன்னாள் படைவீரர்களின் சிறார்களிடையே 2017 -18 ஆம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2-வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற எம். பீரீத்தியின் தந்தை ஜெ. மணியிடம் ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலையையும்,  2ஆம் மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீஷாவின் தாயார் ராணியிடம் ரூ. 3 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  இரா. ரேவதி,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ். கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அனைத்துத் துறை  அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.