புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சென்னை அருகே விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை: தப்பி ஓடிய பெண் நாகர்கோவிலில் கைது

சென்னை அருகே 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீஸார் நாகர்கோவிலில் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:26 am

சென்னை அருகே 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீஸார் நாகர்கோவிலில் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). இவர்களது குழந்தைகள் அஜய் (7), காருணிகா (4) .
வேலைப் பளு காரணமாக கடந்த 31ஆம் தேதி இரவு விஜய் அலுவலகத்திலேயே தங்கிவிட்டாராம். சனிக்கிழமை (செப். 1) அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தபோது வெளியே அபிராமியின் மொபெட் இல்லை. எனவே, அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்குச் சென்றார். ஆனால், அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனராம். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், மனைவியின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் விஜய் மீண்டும் தனது வீட்டுக்குச் சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்கு அவரது 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அபிராமி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சனிக்கிழமை காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்லிடப்பேசிகளுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல்  வந்தது. அதில், "எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன, செத்தால் என்ன" என குறிப்பிட்டு இருந்தாராம்.
இதையடுத்து, அபிராமியின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து போலீஸார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்தில் வெளியூர் தப்பிச் சென்று இருக்கலாம் என தெரியவந்தது. அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.
இந்நிலையில், அபிராமி நாகர்கோவிலில் போலீஸாரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அபிராமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக குழந்தைகள் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.