மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

"ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:34 pm

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பர் தோட்ட வளர்ச்சித் திட்டத்தில்  2017ஆம் ஆண்டு ரப்பர் மறு மற்றும் புது நடவு செய்த சிறு விவசாயிகள், ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.  
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம்  ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். மானியம் பெற விண்ணப்பப் படிவங்களை ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக். 31ஆம் தேதிக்குள் ரப்பர் வாரிய மண்டல அலுவலகம், மார்த்தாண்டம் அல்லது குலசேகரம்,  குழித்துறை கள நிலையங்களில் சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.