/

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:24 am

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெற்றது.
போட்டிகளை,  சேதுலக்குமிபாய் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ. விஜயன் தொடங்கிவைத்தார். போட்டிகளில் உண்ணாமலைக்கடை, அரசு உயர்நிலைப் பள்ளி இல. பகவதிபொருமாள், மருதங்கோடு மேல்நிலைப் பள்ளி அ.ஜெயகுமார்  ,கோட்டாறு கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி  ஈஸ்வரி, செண்பகராமன்புதூர் அரசுப் பள்ளி  செ. மூர்த்தி , ஏழகரம், அரசு உயர்நிலைப்பள்ளி, கா.விமல் சங்கர், மாதவலாயம், அரசு மேல்நிலைப் பள்ளி  தே. வினித்து ஆகியோர்  நடுவர்களாக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  பி. ரெசினாள்மோள்  பரிசு வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.