தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதனிடையே, பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மேம்பாலம் அமைந்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். எனவே, பாலம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி மணலி சந்திப்பில் இருந்து கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டது.
இதில், அமைப்பின் தலைவர் அ.ரேவன்கில், பொதுச்செயலர் வை.விஜயகோபால், கௌரவத் தலைவர் எப்.எஸ்.முபாரக், , பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் சண்முகம், செயலர் மோசஸ் ஆனந்த், தணிக்கையாளர் ஜாபர்சாதிக், நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள், பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 13 2026) 12 ராசிகளுக்கும்! கன்னிக்கு லாபம்!

தடை நீங்கும் விருச்சிக ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
