இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மேம்பாலம் அமைக்க ஆட்சேபம்: தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்

தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம்

Updated On :26 பிப்ரவரி 2019, 1:35 am IST

தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதனிடையே, பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில்  திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மேம்பாலம் அமைந்தால் வணிகர்களின் வாழ்வாதாரம்  முற்றிலும் பாதிக்கும். எனவே, பாலம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி மணலி சந்திப்பில் இருந்து  கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டது.
இதில், அமைப்பின் தலைவர் அ.ரேவன்கில், பொதுச்செயலர் வை.விஜயகோபால், கௌரவத் தலைவர்  எப்.எஸ்.முபாரக், , பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் சண்முகம், செயலர் மோசஸ் ஆனந்த்,  தணிக்கையாளர் ஜாபர்சாதிக்,  நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், வணிகர்கள், பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.