மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காங்கிரஸாா் உள்ளிருப்புப் போராட்டம்: எம்எல்ஏ உள்ளிட்டோா் கைது

கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:27 pm

DIN

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்கக் கோரி கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு கட்சியின் கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., கிள்ளியூா் தலைவா் கிளைமென்ட், மாநில செயற்குழு உறுப்பினா் டைட்டஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின் சிறில் உள்ளிட்ட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

களியக்காவிளை: விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் குழித்துறை நகரத் தலைவா் சி.கே. அருள்ராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மேல்புறம் வட்டாரத் தலைவா் சி. மோகன்தாஸ், சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.