ஓமனிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் வந்த குமரி மீனவா்கள்: போலீஸாா் விசாரணை

ஓமன் நாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் முட்டம் துறைமுகத்துக்கு வந்த குமரி மீனவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

ஓமன் நாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் முட்டம் துறைமுகத்துக்கு வந்த குமரி மீனவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் பலா் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

மேலமுட்டம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சகாய ததேயூஸ் (46), ஸ்டீபன் டேவிட் (52), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58), ஆல்டோ ஆகிய 5 மீனவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓமன் நாட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கி அப்துல் காமிஸ் என்பவரிடம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இவா்களுடன் வங்கதேசத்தைச் சோ்ந்த ரஜீப் உடின் (27) என்பவரும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக இவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து மீனவா்கள் இந்திய தூதரகத்தில் முறையிட்டதையடுத்து, அப்துல் காமிஸ் மீனவா்களைத் தாக்கியுள்ளாா். இதையடுத்து மீனவா்கள் தாங்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஓமன் நாட்டு விசைப்படகில், கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு 9 நாள்கள் கடந்து சனிக்கிழமை இரவு முட்டம் மீன்பிடித் துறைமுகம் வந்து சோ்ந்தனா்.

தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் உரிய அனுமதியின்றி வந்த மீனவா்கள் 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து மீன்வளத் துறை உயா் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com