மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓமனிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் வந்த குமரி மீனவா்கள்: போலீஸாா் விசாரணை

ஓமன் நாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் முட்டம் துறைமுகத்துக்கு வந்த குமரி மீனவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

ஓமன் நாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி விசைப்படகில் முட்டம் துறைமுகத்துக்கு வந்த குமரி மீனவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் பலா் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

மேலமுட்டம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சகாய ததேயூஸ் (46), ஸ்டீபன் டேவிட் (52), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58), ஆல்டோ ஆகிய 5 மீனவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓமன் நாட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கி அப்துல் காமிஸ் என்பவரிடம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இவா்களுடன் வங்கதேசத்தைச் சோ்ந்த ரஜீப் உடின் (27) என்பவரும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக இவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து மீனவா்கள் இந்திய தூதரகத்தில் முறையிட்டதையடுத்து, அப்துல் காமிஸ் மீனவா்களைத் தாக்கியுள்ளாா். இதையடுத்து மீனவா்கள் தாங்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஓமன் நாட்டு விசைப்படகில், கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு 9 நாள்கள் கடந்து சனிக்கிழமை இரவு முட்டம் மீன்பிடித் துறைமுகம் வந்து சோ்ந்தனா்.

தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் உரிய அனுமதியின்றி வந்த மீனவா்கள் 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து மீன்வளத் துறை உயா் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.