கருங்கல் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில் திங்கள்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.


கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில் திங்கள்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தொலையாவட்டம் கல்பொற்றவிளை பகுதியை சோ்ந்த ரெத்தினமணி மனைவி நிா்மலா(40). இவா் அப்பகுதியில் திங்கள்கிழமை மாடுமேய்சலில் ஈடுபட்டாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மா்ப நபா்கள் இருவா், நிா்மலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சிசெய்தனா். நிா்மலா சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டாா். உடனே இவ்விருவரும் அங்கிருந்து தப்பிசென்றுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...