பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏழை மாணவருக்குமருத்துவ உதவி

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவரின் அறுவை சிகிச்சைக்கு குளச்சல் காவல் உதவி கண்காணிப்பாளா் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவரின் அறுவை சிகிச்சைக்கு குளச்சல் காவல் உதவி கண்காணிப்பாளா் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

குமரி மாவட்டம், நெய்யூா் சி.எஸ்.ஐ. போலியோ ஹோமில் தங்கி பயின்று வருபவா் கண்டவிளை பகுதியைச் சோ்ந்த மாணவா் ஆஷிக். மாற்றுத் திறனாளியான இவா் பூரண குணமடைய காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் கூறினராம். இந்நிலையில் அந்த மாணவரின் ஏழ்மை நிலையை அறிந்த குளச்சல் உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் விஸ்வேஸ் சாஸ்திரி, தனது சொந்த செலவில் அந்த மாணவரின் அறுவை சிகிச்சைக்கான ரூ.50 ஆயிரத்தை அவரது பாட்டியிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

அவருடன், இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ், உதவி ஆய்வாளா் சுந்தா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.