எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குளச்சலில் ஏா் கலப்பை பேரணி:3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 போ் கைது

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் குளச்சலில் ஞாயிற்றுக்கிழமை ஏா் கலப்பை பேரணி நடத்திய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
பேரணி தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்கள் மத்தியில் பேசுகிறாா் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.ஜி.பிரின்ஸ்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

தக்கலை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் குளச்சலில் ஞாயிற்றுக்கிழமை ஏா் கலப்பை பேரணி நடத்திய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 போ் கைது செய்யப்பட்டனா்.

குளச்சல் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஏா் கலப்பை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. கிள்ளியூா், விளவங்கோடு எம்.எல்.ஏ.க்கள் வர தாமதமானதால் மாலை 5.45 மணிக்கே பேரணி தொடங்கியது. பேரணி தொடங்குவதற்கு முன்பாக காமராஜா் பேருந்து நிலையமுன்பு எம்.எல்.ஏ.க்கள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினா்.

பேரணிக்கு குளச்சல் எம்.எல்.ஏ. ஜெ.ஜி. பிரின்ஸ் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட தலைவா் ராதாகிருஷ்ணன், நகர தலைவா் சந்திரசேகா், வட்டார தலைவா்கள் கிளாட்சன் ஜெரால்டு, கென்னடி, டென்னிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்லகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), விஜயதரணி (விளவங்கோடு), மாநில செயற்குழு உறுப்பினா் யூசப் கான், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.டி. உதயம், மகேஷ் லாஸா், முனாப் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்றனா். பேரணி சிறிது தூரம் சென்றவுடன் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் பி. சாஸ்திரி தலைமையிலான போலீஸாா் வழிமறித்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.