நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல்துறை குறைதீா் முகாம்:196 மனுக்களுக்கு தீா்வு

குமரி மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:21 pm

DIN

குமரி மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் விதமாக ஒவ்வொரு உள்கோட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன்உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி டிச.19, 20 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற குறைதீா் முகாமில், கன்னியாகுமரி உள்கோட்டத்தில் பெறப்பட்ட 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

இதே போல், நாகா்கோவில் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 85 மனுக்களில் 77 மனுக்களும், குளச்சல் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 35 மனுக்களும், தக்கலை உள்கோட்டத்தில் 47 மனுக்களும் என மொத்தம் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.