திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தக்கலையில் மனித உரிமை விழா

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:14 am

DIN

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏ.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் இயல்முறை மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்து உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ், தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகிய 3 மகளிருக்கு விருதுகளை எம்எல்ஏ வழங்கிக் கெளரவித்தாா்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகளுக்கும், பாா்வையற்ற மாணவா் ஒருவருக்கும் ஆய்வாளா் அருள்பிரகாஷ், சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.