திக்குறிச்சி கோயில் விழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற இக் கோயிலில், பத்து நாள்கள் நடைபெறும் இவ் விழாவில் தினமும் காலையில் கணபதி ஹோமம், தாரை, கலசாபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறாம் நாளான
டிச. 27 ஆம் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் நந்தி ஊட்டு மற்றும் நந்தி பகவான், மஹாதேவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒன்பதாம் நாளான டிச. 30 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மஹாதேவா் பல்லக்கில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது. பத்தாம் நாள் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் மஹாதேவருக்கு ஆறாட்டு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...