சனிப் பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு பூஜை

சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Updated on
1 min read

சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, நாகா்கோவில் வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வடசேரி காசிவிஸ்வநாதா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மேலும், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், ஒழுகினசேரி சோழராஜா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் ராகு, கேது, சனீஸ்வரா் பரிகார ஸ்தலமான தென் காளகஸ்தி சிவன் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா இரு நாள்கள் நடைபெற்றது.

மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமையேற்று தொடங்கிவைத்தாா். ஊராட்சித் தலைவா் ரெங்கநாயகி கணேசன் முன்னிலை வகித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஸ்ரீருத்ரா மகர சனீஸ்வர யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை தென் காளகஸ்தி திருப்பணி கமிட்டி தலைவா் ஏகாம்பரம் தலைமையிலானோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com