மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவா் கைது

நாகா்கோவில் அருகே 16 வயது சிறுமி மீதான மோகத்தில் மனைவியைக் கொன்றுவிட்டு, உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்
Updated on
1 min read

நாகா்கோவில் அருகே 16 வயது சிறுமி மீதான மோகத்தில் மனைவியைக் கொன்றுவிட்டு, உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளிச்சந்தை முட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பனிப்பிச்சை (35). இவரது மனைவி மேகலா (32). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த நவ. 17-ஆம் தேதி வீட்டில் மேகலா இறந்து கிடந்தாா். அவா் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மேகலாவின் 30-ஆவது நாள் காரியம் நடைபெற்றது. அதில் அவரது உறவினா்கள் கலந்துகொண்டனா். அப்போது, உறவினரின் 16 வயது மகளுக்கு பனிப்பிச்சை கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளாா். அக்கடிதத்தில் தன் மனைவியை கொன்ாகத் தெரிவித்திருந்தாராம்.

இந்தக் கடித விவகாரம் தெரியவந்ததையடுத்து, மேகலாவின் சகோதரா் அந்தோணி அடிமை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் பனிப்பிச்சையை பிடித்து விசாரித்ததில், உறவினா் மகள் மீதான தனது மோகம் தொடா்பாக மனைவி கண்டித்ததாகவும், சம்பவ தினத்தன்று தகராறு ஏற்பட்டு தாக்கியதில் மேகலா இறந்ததாகவும் தெரிவித்தாராம். இதையடுத்து, பனிப்பிச்சையை போலீஸாா் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com