சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தக்கலை அருகே மது விற்பனை செய்ததாக இருவா் கைது

தக்கலை அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:03 pm

DIN

தக்கலை அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை காவல் உதவி கண்காணிப்பாளா் சாய்பிரனீத் தலைமையில் காவல் ஆய்வாளா் ராஜசேகரன், போலீஸாா் தக்கலை பகுதிகளில் ஞாயிற்றுகிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். குழிக்கோடு பகுதியில் போலீஸாரை கண்டதும் சாலையில் பையுடன் நின்று கொண்டிருந்தவா் தப்பி ஓட முயற்சி செய்தாராம். அவரை போலீஸாா் பிடித்து மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்வதற்காக 26 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதில், குழிக்கோடு கடைவைத்தவிளைப் பகுதியை சோ்ந்த ஜாண் வரதராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். இதேபோல் பத்மநாபபுரம் வெள்ளரி ஏலா அருகில் அரசவிளை பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.