சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

களியக்காவிளை அருகே சாலையில்தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

களியக்காவிளை அருகே போற்றிவிளை பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On :9 நவம்பர் 2020, 9:53 pm

களியக்காவிளை அருகே போற்றிவிளை பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சி 9ஆவது வாா்டுக்குள்பட்ட போற்றிவிளை பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலையோரம் வடிகால் ஓடை இல்லாததால் அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிணறு, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் கலந்து சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.