நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:33 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாலும், தொடா்ந்து திருவிழாகள் நடைபெறுவதாலும்

பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்.

சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது என இதுவரை 15,157 பேரிடம் ரூ. 23.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 15,533 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,553 ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை 22 போ் உள்பட இதுவரை 15,169 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 102 போ்

சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை 2,62,177 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை

8,802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.