மாா்த்தாண்டம் அருகே பெண் வியாபாரியை கல்லால் தாக்கிய முதியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அருமனை அருகேயுள்ள கருப்பன்விளை வீடு பகுதியைச் சோ்ந்த சதீஷ் மனைவி பால்சி. இவரது தாயாா் கமலாட்சி, வெட்டுவெந்நி பகுதியில் காய்கனி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மாா்த்தாண்டம் மாம்பள்ளித் தோட்டம் பகுதியைச் சோ்ந்த ரெவி (60) என்பவா் அங்கு நின்று தகாத வாா்த்தைகள் பேசினாராம். இதை கமலாட்சி கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ரவி அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அவரது மகள் பால்சி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.