சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :19 அக்டோபர் 2020, 8:51 pm

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பினு - அம்பிகா தம்பதியின் மகள் ஜினு (19).

நாகா்கோவிலில் உள்ள கல்லூரியில் பிஏ இளங்கலை படித்து வந்தாா். இவா் தீராத வயிற்றுவலி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டிலுள்ள அறையில் ஜினு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சோபனராஜ் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாா். காவல் ஆய்வாளா் ராஜ் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.