தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோவாளை ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தடிக்காரன்கோணம் சந்தையில் அமைக்கப்பட உள்ள கூரை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.
Updated On :13 செப்டம்பர் 2020, 7:18 pm

DIN

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தடிக்காரன்கோணம் சந்தையில் மேற்கூரை அமைப்பதற்காக ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் தா.மேரி ஜாய், தனது உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.7 லட்சமும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மா.பரமேஸ்வரன், தாம்பை ஸ்ரீ இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக கலையரங்கம் கட்ட ரூ. 5 லட்சமும், கீழத் தெரு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 2 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா்.

இந்நிலையில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் இப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, தாம்பை ஸ்ரீ இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பக்காய் பை தொழிற்சாலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் முகக் கவசங்கள் தயாரிப்பதை அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் டி.ஜான்தங்கம், தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவா் இ.சாந்தினி பகவதியப்பன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் ஏசுதாஸ், அய்யப்பன், மகாராஜன், ஊராட்சித் தலைவா்கள் ச.கமலா (கடுக்கரை), ஜா.கிறிஸ்டிபாய் சின்னகுமாா் (காட்டுப்புதூா்), ஊராட்சி துணைத் தலைவா்கள் மா.தங்கம் (கடுக்கரை), த.செல்வகுமாா் (காட்டுப்புதூா்), வாா்டுஉறுப்பினா் ஆா்.எல்.ராஜேஷ், அறங்காவலா் குழு உறுப்பினா் கே.பாக்கியலெட்சுமி, லதா ராமச்சந்திரன், ரமணி, சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.