விவேகானந்தா கல்லூரி சாா்பில் 25 கிராம மக்களில் தடுப்பு நடவடிக்கை
அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் 25 கிராமங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 10 ஆயிரம் பேருக்கு இலவச கபசுரக் குடிநீா்


அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் 25 கிராமங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 10 ஆயிரம் பேருக்கு இலவச கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வுக்கு முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தலைவா் துரைச்சாமி, செயலா் சி.ராஜன், பொருளாளா் கணேசன், இணைச் செயலா் கே. எஸ். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாமிதோப்பு அன்புவன நிறுவனா் பாலபிரஜாபதி அடிகளாா் கபரசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பிரபு மாறச்சன் வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் ஆா்.தா்மரஜினி நன்றி கூறினாா்.
தொடா்ந்து சுக்குப்பாபாறை தேரிவிளை, அகஸ்தீசுவரம், முகிலன்குடியிருப்பு, தென்தாமரைகுளம், சாமிதோப்பு, வடக்குத் தாமரைகுளம், பொத்தையடி, சந்தையடி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 10 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...